02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துகிறதா?- ரஷ்யா முக்கிய அறிவிப்பு
BY NEWS TODAY
05 Feb 2026
0
பகிர்

கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது  தொடர்பாக இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.



ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கக்கூடாது என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில்,  இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவிடமிருந்து  கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர  மோடி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார்.



அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பிற்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,  ”இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் வழங்குவது ரஷ்யா மட்டுமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். பிற நாடுகளிடம் இருந்தும் இந்த பொருள்களை இந்தியா கொள்முதல் செய்து வருகின்றது. எனவே, இதில் நாங்கள் புதிதாக எதையும் காணவில்லை.



இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முழு சுதந்திரம் உள்ளது. எனினும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்  மாஸ்கோவுக்கு வரவில்லை” என்று தெரிவித்தார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்