தமிழக புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் IPS
BY NEWS TODAY
29 May 2026
0
பகிர்

 தமிழக புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் 

 சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்


தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படாமல் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.

 இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதும் தேர்தல் ஆணையத்தால் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நீக்கப்பட்டு சந்திப்பிராய் ரத்தோர்

 தமிழக டிஜிபி ஆக நியமிக்கப்பட்டார்.

 இந்நிலையில் புதிய ஆட்சி அமைந்ததும் புதிய டிஜிபி நியமிக்க மூன்று பேர் கொண்ட பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

 இந்நிலையில் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் தேனி மாவட்ட எஸ்பி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், சென்னைப் பெருநகர காவல் ஆணையராகவும், பிஎஸ்எஃப் கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றியுள்ளார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்