மறைந்த இயக்குனர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்: வழிநெடுக அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி .
BY NEWS TODAY
28 Jun 2026
0
பகிர்

சென்னை : மறைந்த இயக்குனர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்து துவங்கியது. வழிநெடுக அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ்(73), மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. நுங்கம்பாக்க த்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், சிவகுமார், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ,அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், வினோத மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப் உள்ளிட்ட பல திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

பாக்யராஜ் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து பாக்யராஜ் உடல் வெளியே கொண்டு வரப்பட்ட போது போலீசார் மரியாதை செய்தனர். தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் காலை 9 மணியளவில் துவங்கியது.

வள்ளுவர் கோட்டம் சிக்னல், கோடம்பாக்கம் ஹைவே வழியாக ஆர்கே சாலை, காமராஜர் சாலை வழியாக ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று இறுதியாக பெசன்ட் நகர் மின்மயானம் வந்து அடைகிறது. அங்கு அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது. அதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. பாக்யராஜின் உடலை வீட்டில் இருந்து வாகனம் வரை பார்த்திபன், சரத்குமார் ஆகியோர் தோளில் சுமந்து வந்த

னர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்