கர்நாடகாவை அதிரவைத்த கசமுசா வீடியோ: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்
BY NEWS TODAY
20 Jan 2026
0
பகிர்

காவல்துறை அலுவலகத்திலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதையடுத்து டிஜிபி அந்தஸ்து பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகா மாநில காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலக அறையிலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் துறை சீருடையிலேயே அலுவலக நேரத்தில் , பெண்களுடன் ஜாலியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட்(இடைநீக்கம்) செய்ய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.  காவல் துறையின் கண்ணியத்திற்கு விரோதமாக செயல்பட்டதாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  ராமச்சந்திர ராவ் மீது விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.



ஆனால், தன் மீதான புகார்களை ராமச்சந்திர ராவ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  "இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானவை மற்றும் மார்ஃபிங்  செய்யப்பட்டவை. எனது புகழைக் கெடுப்பதற்காகச் சிலர் திட்டமிட்டுச் செய்த சதி இது. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்," என்று தெரிவித்துள்ளார். இவர் சில மாதத்திற்கு முன்னர் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ்வின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்