02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
BY NEWS TODAY
11 Feb 2026
0
பகிர்

உத்தரப்பிரதேசத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத்  திட்டவட்டமாக கூறியுள்ளார்.



உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் 2026 - 27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப்ரவரி 11) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி பகுதியில் பொதுநிகழ்ச்சியில் முதலமைச்சர் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசுகையில், ''நாங்கள் ராம் லீலாவுக்காக வந்து அதே இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்று கூறினோம். இதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? தீர்ப்பு நாளுக்காக பலரும் காத்திருந்தனர்.



இந்தியாவின் பாரம்பரியம், புகழ்பெற்ற கலாசாரம் மற்றும் சனாதன தர்மத்திற்கு மரியாதை செலுத்தும் வகையிலான தீர்ப்பு, நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் காவிக் கொடி தொடர்ந்து பறக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்தியாவையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது. பாஜக அரசு சொல்வதை மட்டுமே செய்கிறது.



அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று கூறினோம். அதனைச் செய்தோம். 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்கு பெருமைமிகு தருணம் கிடைத்துள்ளது. கடந்த ஆட்சி, ராமர் கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படமாட்டாது. மக்கள் விதிகளைப் பின்பற்றி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். விதிகளைப் பின்பற்றுபவர்கள் பலனடைவார்கள். பின்பற்றாதவர்கள் நகரத்திற்குச் செல்வார்கள்'' என்றார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்