16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்


மதுரை சர்வதேச விமான நிலையத்தில் (AAI) வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியும், அதற்கு பணம் கேட்டும் இளைஞர்கள், வேலைதேடுபவர்களை சிலர் அணுகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஒருபோதும் அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் விண்ணப்பதாரர்களை நேரடி வேலைவாய்ப்புக்காக அணுகுவதில்லை. மேலும், ஆள்சேர்ப்புச் செயல்முறையின் எந்த நிலையிலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தை ஆணையம் கேட்காது என தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் உள்ள அனைத்துச் சட்டபூர்வமான வேலைவாய்ப்பு காலியிடங்களும், இந்த ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.aai.aero வாயிலாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு தகவலையும், இந்த அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவே சரிபார்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

இத்தகைய மோசடியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்த்து, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்