Hot News :
For Advertisement Contact: 9360777771

உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி?: கல்வித்துறை நோட்டீஸ்

© News Today Tamil

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கு கல்வித்துறை  சார்பில் நேரட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடலூரில் உள்ள தனி​யார் பள்ளி வேன் நேற்று காலை தொண்​ட​மாநத்​தம் பகு​தி​யைச் சேர்ந்த 4 மாணவர்​களை ஏற்​றிக் கொண்டு சென்​றது. மஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஓட்​டுநர் சங்​கர் (47) வேனை ஓட்​டிச் சென்​றார்.  செம்​மங்​குப்​பம் பகு​தி​யில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்​புரம்​-மயி​லாடு துறை பயணி​கள் ரயில் எதிர்​பா​ராத​வித​மாக மோதி​யது. இதில் வேன் சுக்​குநூறாக நொறுங்​கி, 50 அடி வரை இழுத்​துச் செல்லப்பட்டது.

இந்த கோர விபத்​தில் தொண்​ட​மாநத்​தம் விஜயசந்​திரகு​மார் மகன் நிமிலேஷ் (12), சின்​ன​காட்​டு​சாகை திரா​விடமணி மகள் சாரு​ம​தி(16) ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த சாரு​ம​தி​யின் தம்பி செழியன்( 15), நிமிலேஷின் அண்​ணன் விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்​டுநர் சங்​கர் (47) மற்​றும் விபத்​தில் காயமடைந்​தவர்​களை காப்​பாற்ற ஓடிச் சென்​று, மின்​சா​ரம் பாய்ந்​த​தில் பாதிக்​கப்​பட்ட செம்​மங்​குப்​பம் அண்​ணாதுரை (47) ஆகியோரை அங்​கிருந்​தவர்​கள்மீட்​டு, கடலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். சாரு​ம​தி, நிமிலேஷ் உடல்​களை போலீ​ஸார் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கடலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர் இதற்கிடையே, மேல்​சிகிக்​சைக்​காக புதுச்​சேரி ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்ட செழியன், அங்கு உயிரிழந்தார். 

கடலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை அமைச்​சர் சி.வெ. கணேசன் சந்​தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயி​ரிழந்த மாணவர்களின் உடல்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி என தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post இன்றைய பஞ்சாங்கம்
Next Post பரபரப்பு... கோவை கலெக்டருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!
Related Posts