அமெரிக்காவில் ராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தின் கிராமப்புறத்தில் ராணுவ வெடிமருந்து உற்பத்தி ஆலை இயங்கி வந்தது. இங்கு ராணுவ மற்றும் விண்வெளித் தொழில்களுக்கான வெடிமருந்துகளை உற்பத்தி செய்யும் அக்யூர்ட் எனர்ஜிடிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் திடீரென குண்டு வெடித்தது. இந்த வெடிவிபத்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள வீடுகளையும் உலுக்கியது. இந்த விபத்தில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த பயங்கர வெடி விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்த தரைமட்டமான கட்டடங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என டென்னஸ்ஸி கவர்னர் பில்லீ தெரிவித்துள்ளார். அவர், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.