ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி புல்லட் ரயிலில் பயணம் செய்தார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் சென்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு இரு நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். டோக்கியோவில் 16 மாகாண கவர்னர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இதனையடுத்து இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரயிலில் ஒன்றாக பயணம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி. ரயில் இன்ஜின் ஓட்டும் பைலட்டுக்கான பயிற்சி பெற்றுவரும் இந்தியர்களையும் சந்தித்தார். இந்த பயண விவரத்தை பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.