Hot News :

சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

© News Today Tamil

ஹைதராபாத்தில் 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம்,  ஹைதராபாத் ஷம்ஷாபாத் வின நிலையத்தில் 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய ஊர்களில் இருந்து ஹைதராபாத் வந்த விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இமெயில் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்டனர். 

அந்த விமானங்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும் பயணிகளின் பொருட்கள், கேபின் பைகள் மற்றும் சரக்கு பெட்டிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. , இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post வாசன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் புதிய ஒப்பந்தம்
Next Post காவலர் கையை கடித்து குதறிய தவெக தொண்டர் கைது
Related Posts