Hot News :

சட்டமன்ற தேர்தலுக்கு பொதுச்சின்னம் கோரி தவெக மனு

© News Today Tamil

சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச்சின்னம் கோரி இன்று முதல் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுச்சின்னம் கோரி தவெக மனு அளித்துள்ளது.

அதில், 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலை வழங்கி அவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கீடு செய்யுமாறு தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று மனு வழங்கியுள்ளனர். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post ராஜபாளையம் கோயிலில் இரட்டைக் கொலை
Next Post தமிழகத்தில் ஆட்சி ஒன்று எதற்கு இருக்கிறது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
Related Posts