Hot News :

சேலத்தில் பயங்கரம்- திமுக செயலாளர் சுட்டுக்கொலை

© News Today Tamil

சேலத்தில் நிலப்பிரச்னை காரணமாக திமுக செயலாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள கருமந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக செயலாளரான இவரை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்படி டிஎஸ்பி சுரேஷ் குமார் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக இருவரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. திமுக செயலாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post காஞ்சிபுரத்தில் விஜய் ஆட்டம் நாளை மீண்டும் ஆரம்பம்!
Next Post டெல்லியில் சர்வதேச ஆயுதக்கடத்தல் கும்பல் கைது
Related Posts