தாய்லாந்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோவை பாத்திமா போஷ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் இம்பாக்ட் சேலங்சர் ஹாலில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பணியாற்றினார்.
போட்டியின் இறுதிச்சுற்றில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். முதல் ரன்னர் அப் ஆக தாய்லாந்து அழகியும், இரண்டாம் ரன்னர் அப் ஆக வெனிசுலா அழகியும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்கு வரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




