Hot News :

பிஹார் ஆட்சியை ஆதரிக்கத் தயார்- அசாதுதீன் ஒவைசி பேட்டி

© News Today Tamil

சீமாஞ்சல் பகுதிக்கு நீதி கிடைத்தால்  நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். 

பிஹாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஐந்து இடங்களை வென்றுள்ளது. இந்த கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் கூறுகையில்," பிஹாரின் வளர்ச்சி என்பது தலைநகர் பாட்னா மற்றும் ராஜ்கிர் ஆகிய பகுதிகளில் மட்டும் நின்றுவிடக் கூடாது. நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சீமாஞ்சல் பகுதிக்கு நீதி கிடைக்கும் பட்சத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.

எவ்வளவு காலம் தான், பாட்னா மற்றும் ராஜ்கிரை மையமாக கொண்டு வளர்ச்சி பணிகள் நடக்கும்?  சீமாஞ்சல் நதி அரிப்பு, பெரிய அளவிலான இடம்பெயர்வு மற்றும் பரவலான ஊழலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு இந்த பிரச்னைகளை தீர்க்க வேண்டும். எங்கள் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் வாரத்திற்கு இரண்டு முறை அந்தந்த தொகுதி அலுவலகங்களில் அமர்ந்து, அவர்களின் வாட்ஸ் அப்பில் இருந்து எனக்கு நேரடியாக புகைப்படங்களை எடுத்து அனுப்புவார்கள்.

அது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை நான் சரியாக கண்டறிய முடியும். நாங்கள் ஆறு மாதங்களுக்குள் இந்த வேலையைத் தொடங்க முயற்சிப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நானும் சென்று நேரில் ஆய்வு செய்ய முயற்சி செய்வேன்" என்றார்.

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post டெல்லியில் சர்வதேச ஆயுதக்கடத்தல் கும்பல் கைது
Next Post வங்க கடலில் புயல் சின்னம்- தென் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Related Posts